திவ்யாவிற்கு ஹேர் ட்ரிம்
காலை மணி 5.50 ஆகியிருந்தது, ஆயுதபூஜை முடிந்த களைப்பில் வழக்கம் போல்
தனது சலூன் கடையை திறக்க வந்திருந்தான் சண்முகம், அது மூன்று வீட்டை
கொண்டுள்ள ஒரு காம்பவுண்டுடன் கூடிய காம்ப்ளக்ஸ் கடை. அவ்வீடு ஒன்றில்
குடியிருக்கும் சரஸ்வதி அக்கா அந்த வீட்டைத் தொடர்ந்து தனது கடையை சேர்ந்து
வாயிலில் கூட்டிக் கொண்டிருந்தது சரஸ்வதியே தனது கடையில் நுழைவதாக
நினைப்பான் எப்போதும்.
சண்முகம் 27 வயதுள்ள சொந்தமான் தனது சலூன் வைத்துள்ள இளைஞன், சரஸ்வதிக்கு 38 வயதிருக்கும், சண்முகத்திற்கு நல்ல ப்ரெண்ட்லி லேடி, அவளுக்கு ஒரே பெண் அவளது பெயர் திவ்யா +2 படிக்கிறாள், கணவர் வெளியூரில் வேலை செய்கிறார்..
சரஸ்வதி அக்கா கூட்டி முடிக்கவும், சண்முகம் கடையை அடையவும் சரியாகயிருந்தது, சரஸ்வதி அக்காவை பார்த்து புன்னகைத்து கொண்டே கடையின் சட்டரை திறந்து உள்ளே வந்தான்.
வழக்கம் போல் கடையை கூட்டும் பொழுது, யாரோ கடைக்குள் நுழைவது போல் தெரிய, சண்முகம் சற்றே நிமிர்ந்து பார்க்க, அது சரஸ்வதி அக்கா....
சண்முகம் சற்று திடுக்கிட்டான்.
சண்முகம் : அக்கா..... நீங்க???
சரஸ்வதி : ஆமா சண்முகம்.
சண்முகம் : என்னக்கா விஷயம்???
சரஸ்வதி : விஷயம் ஒன்னுமில்ல சண்முகம், இன்னைக்கு ஒரு சின்ன பங்ஷன் போறோம் சோ, திவ்யாக்கு கொஞ்சம் ஹேர் ட்ரிம் பண்ணனும்..
சண்முகம் : நானா???
சரஸ்வதி : டேய், நீ தானா இங்கு பார்பர்?
சண்முகம் : ஆமா..
சரஸ்வதி : அப்ப நீ தான் வெட்டனும்..
சண்முகம் லேசாக சிரித்தான்..
சரஸ்வதி : ரொம்ப இலிக்காத... நீ சீக்கிரம் க்ளீன் பன்னு, நான் திவ்யாவ கூட்டிட்டு வரேன்..
சரஸ்வதி சென்ற நான்கைந்து நொடிகளுக்குள் திவ்யா உடன் வந்திருந்தாள்..
சண்முகம் கண்ணாடியின் கீழ் முழு நீள மேசையில் இருந்த படையல் இலையையும், அதனருகில் சாமி கும்பிட்டு அலங்கரித்திருந்த கத்திரிகளையும், சவரக்கத்திகளையும் எடுத்து துடைத்துக் கொண்டிருந்தான்.
சரஸ்வதி கடையின் வாயிலுக்கு வெளியேயும், திவ்யா கடையின் உள்புறமும் நின்றிருந்தனர்.
சரஸ்வதி : அடியே, சீக்கிரம் முடிய பிரித்து விட்டு விரிச்சு விடுடி, அப்ப தான் முடி வெட்ட ஆளுங்க வரதுக்குல நம்ம வேலை முடியும்..
திவ்யா : சரிம்மா
திவ்யாவிற்கு சரஸ்வதியை போல சற்று அடர்த்தியான அலை அலையான செந்நிற முடி, அவளது புட்டத்திற்கு மேல் வரை இருந்தது.
திவ்யா தனது ஜடையை பிரித்து முடியை விரித்து உதறிவிட்டு, சண்முகத்தின் கடையிலிருந்த சீப்பை எடுத்து சீவினாள்.
அதற்குள் சண்முகம், சரஸ்வதியிடம் சொல்லிவிட்டு படையல் இலையை தெருமுனையில் உள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வரச் சென்றான்.
சரஸ்வதி அவனை சீக்கிரமாக வருமாறு சைகை செய்தாள்.
திவ்யா முடியை சிக்கு இன்றி நிதானமாக சீவியிருந்தாள். நேற்றைய தினம் தலை குளித்துயிருந்ததால் அவள் முடி புசுபுசுவென்று பஞ்சு போன்று அடர்த்தியாக, அலையலையாக இருந்தது, சண்முகமும் அதற்குள் வந்திருந்தான்.
சரஸ்வதி : சண்முகம் சீக்கிரம் ஆளுங்க வரதுக்குள்ள முடி வெட்டிவிடுட என்றாள்..
சண்முகம் : காலைல முதல் வேலை, இப்டி அவசர படுத்துன எப்டி? கொஞ்சம் இருக்கா என்றான்.
கடையின் இரு சேர்களுக்கு இடையில் திவ்யாவை கண்ணாடி பார்த்து நிற்குமாறு செய்தான்.
பின் அவள் முடியை தடவி கொடுத்து கோதி அள்ளினான், திவ்யாவும், சரஸ்வதியும் அவன் செய்ததை அற்றியிருந்த கண்ணாடியில் விழுந்த பிம்பங்களில் பார்த்தனர்.
சண்முகம் மீண்டும் சீப்பை எடுத்து சீவ ஆரம்பிக்க சரஸ்வதி இரண்டு அடி சண்முகம் கிட்டே வந்தாள்.
சண்முகம் : இவளுக்கு உங்கள மாதிரி முடிக்கா என்றான்.
சரஸ்வதி உம் கொட்டினாள்.
திவ்யா : அண்ணா, நீங்க லேடிஸ்க்கு ஹேர் கட் பண்ணுவிங்களா?
சண்முகம் : ஹீம், எப்போவாது இப்டி கஸ்டமர் பொண்ணுங்கள கூட்டி வருவாங்க, அப்ப மட்டும்.
சண்முகம் பேசிக் கொண்டே திவ்யாவின் முடி நன்கு வாரி முடித்துவிட்டான். .
அவன் கையில் கத்தரியை எடுக்கவும் சரஸ்வதி அவனிடம்
சரஸ்வதி : டேய், கடைசி ஒரு நாளு இன்ச் மட்டும் வெட்டு போது என்றாள்.
சண்முகம் சரியென தலையாட்டி விட்டு சீப்பை எடுத்து மீண்டுமொறு முறை வாரி கடைசி பகுதியை எடுத்தா,
சரஸ்வதி : இந்த கொத்த, அப்டியே வெட்டிறுபா என்றாள்.
சண்முகம் அந்த கொத்தான முடியை எடுத்து கத்திரி கொண்டு க்ரீச், க்ரீச் என்று வெட்ட அது அப்டியே திவ்யாவின் பின்புறம் விழந்தது, திவ்யா அதை சுற்றியிருந்த கண்ணாடியில் பார்த்தாள்.
சண்முகம் மீண்டும் சீப்பை எடுத்து திவ்யாவிற்கு தலைசீவி, அருகிலிருந்த ஸ்ப்ரேயனர எடுத்து அவளின் முடியின் அடிப்பகுதியில் தெளித்து விட்டு, மீண்டும் சீவி அடிப்பகுதி ஒரே நீளத்தில் உள்ளதா எனப் பார்த்து கத்திரியை எடுத்து சரி செய்தான்.
திவ்யாவின் முடி தற்பொழுது இடுப்பு வரை ஒரே நீளத்தில் இருந்தது.
சண்முகம் : அக்கா, அவ்வளவு தான் என்றான்
சரஸ்வதியும், திவ்யாவும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு சரியென தலையசைக்க
சரஸ்வதி : எவ்வளவு டா என்றால்.
சண்முகம் : முதல் வேலை, நீங்க பார்த்து குடுங்க அக்கா என்றான்
சரஸ்வதி 60 ரூபாயை நீட்ட, சண்முகம் அதில் 10 ரூபாய் மட்டும் எடுத்தான்.
சரஸ்வதியும், திவ்யாவும் வெளியே நகர,
சண்முகம் : அக்கா, அடிக்கடி இந்த மாதிரி வேலை குடுங்க., கட்டிங், சேவிங், மொட்டை எதுனாலும் எனக்கு ஓ.கே, உங்களுக்குனர மட்டும் ஹோம் சர்வீஸ் உண்டு என்று நக்கலாக சிரிக்க..
சரஸ்வதி அவனை பார்த்து உதைபடுவ என்று சைகை செய்ய, திவ்யா சிரித்துக் கொண்டே தனது முடியை கொண்டை போட்டுக் கொண்டே நகர்ந்தாள்.
சண்முகம் 27 வயதுள்ள சொந்தமான் தனது சலூன் வைத்துள்ள இளைஞன், சரஸ்வதிக்கு 38 வயதிருக்கும், சண்முகத்திற்கு நல்ல ப்ரெண்ட்லி லேடி, அவளுக்கு ஒரே பெண் அவளது பெயர் திவ்யா +2 படிக்கிறாள், கணவர் வெளியூரில் வேலை செய்கிறார்..
சரஸ்வதி அக்கா கூட்டி முடிக்கவும், சண்முகம் கடையை அடையவும் சரியாகயிருந்தது, சரஸ்வதி அக்காவை பார்த்து புன்னகைத்து கொண்டே கடையின் சட்டரை திறந்து உள்ளே வந்தான்.
வழக்கம் போல் கடையை கூட்டும் பொழுது, யாரோ கடைக்குள் நுழைவது போல் தெரிய, சண்முகம் சற்றே நிமிர்ந்து பார்க்க, அது சரஸ்வதி அக்கா....
சண்முகம் சற்று திடுக்கிட்டான்.
சண்முகம் : அக்கா..... நீங்க???
சரஸ்வதி : ஆமா சண்முகம்.
சண்முகம் : என்னக்கா விஷயம்???
சரஸ்வதி : விஷயம் ஒன்னுமில்ல சண்முகம், இன்னைக்கு ஒரு சின்ன பங்ஷன் போறோம் சோ, திவ்யாக்கு கொஞ்சம் ஹேர் ட்ரிம் பண்ணனும்..
சண்முகம் : நானா???
சரஸ்வதி : டேய், நீ தானா இங்கு பார்பர்?
சண்முகம் : ஆமா..
சரஸ்வதி : அப்ப நீ தான் வெட்டனும்..
சண்முகம் லேசாக சிரித்தான்..
சரஸ்வதி : ரொம்ப இலிக்காத... நீ சீக்கிரம் க்ளீன் பன்னு, நான் திவ்யாவ கூட்டிட்டு வரேன்..
சரஸ்வதி சென்ற நான்கைந்து நொடிகளுக்குள் திவ்யா உடன் வந்திருந்தாள்..
சண்முகம் கண்ணாடியின் கீழ் முழு நீள மேசையில் இருந்த படையல் இலையையும், அதனருகில் சாமி கும்பிட்டு அலங்கரித்திருந்த கத்திரிகளையும், சவரக்கத்திகளையும் எடுத்து துடைத்துக் கொண்டிருந்தான்.
சரஸ்வதி கடையின் வாயிலுக்கு வெளியேயும், திவ்யா கடையின் உள்புறமும் நின்றிருந்தனர்.
சரஸ்வதி : அடியே, சீக்கிரம் முடிய பிரித்து விட்டு விரிச்சு விடுடி, அப்ப தான் முடி வெட்ட ஆளுங்க வரதுக்குல நம்ம வேலை முடியும்..
திவ்யா : சரிம்மா
திவ்யாவிற்கு சரஸ்வதியை போல சற்று அடர்த்தியான அலை அலையான செந்நிற முடி, அவளது புட்டத்திற்கு மேல் வரை இருந்தது.
திவ்யா தனது ஜடையை பிரித்து முடியை விரித்து உதறிவிட்டு, சண்முகத்தின் கடையிலிருந்த சீப்பை எடுத்து சீவினாள்.
அதற்குள் சண்முகம், சரஸ்வதியிடம் சொல்லிவிட்டு படையல் இலையை தெருமுனையில் உள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வரச் சென்றான்.
சரஸ்வதி அவனை சீக்கிரமாக வருமாறு சைகை செய்தாள்.
திவ்யா முடியை சிக்கு இன்றி நிதானமாக சீவியிருந்தாள். நேற்றைய தினம் தலை குளித்துயிருந்ததால் அவள் முடி புசுபுசுவென்று பஞ்சு போன்று அடர்த்தியாக, அலையலையாக இருந்தது, சண்முகமும் அதற்குள் வந்திருந்தான்.
சரஸ்வதி : சண்முகம் சீக்கிரம் ஆளுங்க வரதுக்குள்ள முடி வெட்டிவிடுட என்றாள்..
சண்முகம் : காலைல முதல் வேலை, இப்டி அவசர படுத்துன எப்டி? கொஞ்சம் இருக்கா என்றான்.
கடையின் இரு சேர்களுக்கு இடையில் திவ்யாவை கண்ணாடி பார்த்து நிற்குமாறு செய்தான்.
பின் அவள் முடியை தடவி கொடுத்து கோதி அள்ளினான், திவ்யாவும், சரஸ்வதியும் அவன் செய்ததை அற்றியிருந்த கண்ணாடியில் விழுந்த பிம்பங்களில் பார்த்தனர்.
சண்முகம் மீண்டும் சீப்பை எடுத்து சீவ ஆரம்பிக்க சரஸ்வதி இரண்டு அடி சண்முகம் கிட்டே வந்தாள்.
சண்முகம் : இவளுக்கு உங்கள மாதிரி முடிக்கா என்றான்.
சரஸ்வதி உம் கொட்டினாள்.
திவ்யா : அண்ணா, நீங்க லேடிஸ்க்கு ஹேர் கட் பண்ணுவிங்களா?
சண்முகம் : ஹீம், எப்போவாது இப்டி கஸ்டமர் பொண்ணுங்கள கூட்டி வருவாங்க, அப்ப மட்டும்.
சண்முகம் பேசிக் கொண்டே திவ்யாவின் முடி நன்கு வாரி முடித்துவிட்டான். .
அவன் கையில் கத்தரியை எடுக்கவும் சரஸ்வதி அவனிடம்
சரஸ்வதி : டேய், கடைசி ஒரு நாளு இன்ச் மட்டும் வெட்டு போது என்றாள்.
சண்முகம் சரியென தலையாட்டி விட்டு சீப்பை எடுத்து மீண்டுமொறு முறை வாரி கடைசி பகுதியை எடுத்தா,
சரஸ்வதி : இந்த கொத்த, அப்டியே வெட்டிறுபா என்றாள்.
சண்முகம் அந்த கொத்தான முடியை எடுத்து கத்திரி கொண்டு க்ரீச், க்ரீச் என்று வெட்ட அது அப்டியே திவ்யாவின் பின்புறம் விழந்தது, திவ்யா அதை சுற்றியிருந்த கண்ணாடியில் பார்த்தாள்.
சண்முகம் மீண்டும் சீப்பை எடுத்து திவ்யாவிற்கு தலைசீவி, அருகிலிருந்த ஸ்ப்ரேயனர எடுத்து அவளின் முடியின் அடிப்பகுதியில் தெளித்து விட்டு, மீண்டும் சீவி அடிப்பகுதி ஒரே நீளத்தில் உள்ளதா எனப் பார்த்து கத்திரியை எடுத்து சரி செய்தான்.
திவ்யாவின் முடி தற்பொழுது இடுப்பு வரை ஒரே நீளத்தில் இருந்தது.
சண்முகம் : அக்கா, அவ்வளவு தான் என்றான்
சரஸ்வதியும், திவ்யாவும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு சரியென தலையசைக்க
சரஸ்வதி : எவ்வளவு டா என்றால்.
சண்முகம் : முதல் வேலை, நீங்க பார்த்து குடுங்க அக்கா என்றான்
சரஸ்வதி 60 ரூபாயை நீட்ட, சண்முகம் அதில் 10 ரூபாய் மட்டும் எடுத்தான்.
சரஸ்வதியும், திவ்யாவும் வெளியே நகர,
சண்முகம் : அக்கா, அடிக்கடி இந்த மாதிரி வேலை குடுங்க., கட்டிங், சேவிங், மொட்டை எதுனாலும் எனக்கு ஓ.கே, உங்களுக்குனர மட்டும் ஹோம் சர்வீஸ் உண்டு என்று நக்கலாக சிரிக்க..
சரஸ்வதி அவனை பார்த்து உதைபடுவ என்று சைகை செய்ய, திவ்யா சிரித்துக் கொண்டே தனது முடியை கொண்டை போட்டுக் கொண்டே நகர்ந்தாள்.
Comments
Post a Comment